நாட்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை - பழைய வீடு II

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன.
23 வருடங்களுக்கு முன்னர் இந்த வீடு இப்படி இருக்கவில்லை. இன்னும் நேர்த்தியாக, அழகாக இருந்ததாக நினைவு. சுற்றிலும் வாழைத் தோப்பு இருந்தது. இந்த அளவுக்கு புற்கள் மண்டி இருக்கவில்லை. கீழே எப்போதும் சலசலப்புடன் ஆறு ஒன்று கிளைபிரிந்து ஓடிக்கொண்டிருக்கும். அந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி போய் கொண்டிருக்கும்.
அந்த பலா மரங்களில் எப்போது காய் இருந்துகொண்டே இருக்கும். மங்குஸ் மரம், குரட்டைச் செடிகள் என எத்தனையோ பழ மரங்கள், ரோசா, கானேசன் என்று பெயர்தெரியாத பல மலர்கள் அந்த வீட்டை சுற்றிலும் இருக்கும். 

அப்போது நான், 2 தம்பிகள், அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் அங்கே வசித்தோம். என் கடைசி தம்பி 2 வயதில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்த்தப்பியதும் அங்குதான்.

கதிர்காமத்தில்

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.

எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.

திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.

பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். 'உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'

சூரியன்FM + நான் - பாகம் 7

இந்த சர்ச்சை அமைதியாகி நீண்ட நாட்கள்...

ஆனாலும் முடிந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விழித்துக் கொள்ளலாம்..

நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தப் போது, 'தொடருந்து' என்ற சொல்லை சூரியன் எப்.எம். செய்திகள் பாவிக்க ஆரம்பித்தது.

சூரியன் FMமும் நானும் - பாகம் 5

சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்

நான் ஏன் எழுதுகிறேன்....?

அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...

சூரியனும் நானும் - பாகம் 2

2008 ஜுன் மாதம் 23-24ம் திகதிகளில் ஒரு தினத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

சூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்..

இன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.

சூரியன் வானொலியும் நானும்........ (01)

2004-05

அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.

குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.

குடைக்குள் மழை

குடைக்கு கீழ அவளோட போக கூச்சமாகவே இருந்தது...

மழை ஒருபக்கம் நனைச்சதாலும், குடை ஒருபக்கம் மறைச்சதாலும் அர்த்தநாதீஸ்வரரப் போல இருந்தேன்..

அவளும்தான்...

பஸ்ல இருந்து இறங்கி ஸ்டேண்டல நின்று மழையை பார்த்து பயந்தப்போ, அந்த இரக்கம் பிறந்திருக்கனும் அவளுக்கு...

கதைக்கு முன்னர் விதை...


#பேய் இருக்கா இல்லையா? 
என்று என்னிடம் கேட்டால், 'இல்லை' என்று சொல்ல துணிகையில், சில கேள்விகள் என் முன் வந்து நிற்கும்...
பராய வயதில் நடத்திய ஆய்வின் பின்னர் பெற்ற பக்குவம், இதனை இல்லை என்று மறுக்க முற்பட்டாலும், #சிறுவயதில் இருந்து நான் அனுபவித்த சில விந்தைகள், இல்லை என்று சொல்வதை சற்று தள்ளி வைக்க தூண்டும்.

நண்பி

ஒரு நண்பி இருந்தாள்…
வெளியிடத்தில் இருந்த அவளின் காதலன் தொல்லை கொடுத்தான்.
அவனும் என் நண்பன்தான்… நல்ல நண்பனும் கூட…. இப்போது இல்லை…
என்னிடம் வந்து புலம்புவாள்..
முடிந்தவரை ஆறுதலாய் இருக்க முயற்சித்தேன்…
சில நாள், பலநாள்….
நட்பு விரிவடைய, அவளை நல்ல நண்பியாக பார்த்தேன்…
நல்ல நண்பனாய் நடந்தேன்….