கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனநாயகம்

தூரத்தே யொரு 
துயரம் போலும்.... 

யாதெனப் பார்க்க முன் 

எழுந்தன ஓலங்கள்... 
அந்திப் பொழுதிலோர்
அவலத்து நேரம்...
மந்திரச் சோலைகள்
மயானமாய் மருவின... 
திக்குகள் இழந்த
சிறுவண்டு போல
மக்கள் ஆட்சியோர்
மய்யப் பெட்டிக்குள்... 

புதிதாய் புலம்பல்

நான் மட்டும்
நனைந்திடும் வகையில்
வான் தூவிற்று மழை....
இத்தனை நீர்க்கீற்றும்,
எனை மட்டுமேன் நனைக்க?
தொட்டுப்பார்க்கும் எந்த பரப்பிலும்,
சொட்டு நீரில்லை அவள் மேனியில்.... 

கடிதனும் பதிலனும்

தன் பங்கிற்கு
தக்கதாகவோ தகாததாகவோ,
பதில் எதனையும்
அறிந்துக்கொள்ள முடியாத
அனேகமான கடிதங்கள்,
ஒரே கவிதையை உளறிவிட்டு
தற்கொலை செய்துக் கொள்கின்றன...

கடஞ்செய்...

அம்மணத்தால் வெட்கிடா,
அம்மணங் களையும்
ஆடைகள்...

அடேய் தம்பி...

அடேய் தம்பி... 
அங்கு ஏன் சென்றாய்....?
முகமறியாமல்,
முகவரி அறியாமல், 
சிதைந்து போனப் பின்னே
சிந்திக்க வைத்தாயே... 

அழிப்பு

தரையில் கிடக்கும்
தலைகளையெல்லாம்
நான்தான் துண்டித்தேன்...

வண்டிகளின் சக்கரங்களையும்
துண்டிக்கச் செய்தது
நான்தான்...

என் முன்னே
துப்பாக்கியை நீட்டிய
சின்னப்பயல் சிப்பாயைக்கூட
சின்னாப்பின்னம் செய்தேன்...

ஐம்புலனும் அகத்தடக்கி

அத்தைக்கு ஆக்கிவச்சேன்,
ஆட்டுக்கும் புல்லுவச்சேன்,
அர வயசு புள்ளைக்கும்
அலுக்காம ஊட்டிவிட்டேன்.
சித்தைக்கு வளருமந்த
சீவனுக்கு சோறுவச்சேன்,
சித்தம் வச்சி செஞ்சதெல்லா,
சீக்கிரமா தீர்த்துட்டிக.
ஒத்தசொல்லும் சொல்லாம
உங்க பாடு போறிகளே,
ஒருத்தி இங்க நின்னுருக்கா,
ஒங்க வாயி தெறக்காதோ?

ரம்பம்

ஏற்றத்தாழ்வுகள்
எப்போதும் சகஜம்தான்... - இதனை
எல்லாத் தாழ்வான பொழுதுகளிலும்
ஏனோ ஏற்றுக் கொள்ள
இயல்வதில்லை.


அடங்கா ‪காதல்‬, முடங்கிய விதம்...

http://www.vikeywignesh.com/2016/01/blog-post_10.htmlபாரதியின் ஒரு வரியும்,
பாடலின் இன்னொரு வரியும்,
புதிதைப் போலவே
அதனைப் பதிந்தேன்...

இதுதான் கவிதை என்று
இவள் சொல்லிதான் எனக்கே தெரியும்...

நாங்கள் ‪அனேகர்‬...

நேசிப்பின்‬
நெற்றியில்‬ ஏறி நின்று
நிமிர்ந்து பார்த்தேன்....

அந்த காதல்‬,
எறும்பை காட்டிலும்
சிறிதாய் தெரிவதை காண
சிரிப்புதான்‬ வந்தது...


என்னோடு நீ இருக்க....

பொதுவிடம் பாராமல்
மெதுவிரல் ‪#‎தொடு‬,

‪#‎எல்லைகள்‬ மீறுவேன்,
பொறுமைகள் ‪#‎பழகு‬….

சிறுவனாய் இருந்து
‪#‎சில்மிஷம்‬ செய்..

கணித மேதையின் முதல் காதல்

கணக்குகளை நீ எழுதும் அழகில் - எல்லாக்
கவிதைகளும் தோற்றுப் போகும்..
விரலுக்குள்ளேயே திரளும் சூத்திரங்கள்...
வாய்க்குள்ளேயே வாய்ப்பாட்டுக் பாத்திரங்கள்...

ஆஹா...
எத்தனை வேகம் -இந்த
கணக்கிடும் கைகளுக்கு...
எத்தனை கணக்குகள்,